கோவையில் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்களை, 40 பேர் நேற்று வாங்கிச்சென்றனர்.
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம், அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடப்பு, 2016 - 17ம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பில் சேர்க்கைபுரிவதற்கான விண்ணப்ப வினியோகம், ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று துவங்கியது.
இப்படிப்பில் சேர, பிளஸ்2 வகுப்பில் இதர பிரிவினர் குறைந்தபட்சம், 540 மதிப்பெண்ணுக்கு மேலும்,எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதுமானது. வரும், ஜூலை, 31ம் தேதியன்று அதிகபட்ச வயது, 30க்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பிரிவினர், 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
இதர பிரிவினர், 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய் (ஜாதி சான்றிதழ்கள் நகல் சமர்ப்பித்து) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று காலை, 10:00 முதல் மாலை, 5:30 மணி வரை, 40 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. ஜூன், 10ம் தேதி விண்ணப்ப வினியோகம் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment